மாநபி சிறப்பை விவரிக்கும் ஆறாவது நூல் வெளியீடு
வசந்த வருடங்கள் 1500

மாநபி சிறப்பை விவரிக்கும் ஆறாவது நூல் வெளியீடு

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அஸ்ஸலாமு அலைக்கும்..

#மாநபி_சிறப்பை_விவரிக்கும் #ஆறாவது_நூல்_வெளியீடு.

அகிலத்தின் அருட்பெருங்கொடை அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
1500_ வது பிறந்த நாளை உலக முஸ்லிம்கள் உற்சாகமாக
கொண்டாடி வருகின்றனர்.

இந்த சங்கையான மாநபியின்
1500_ மீலாத் வருடத்தில்
சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின்
(SSF) சார்பில்
மாநபியின் புகழை மக்களுக்கு
எத்தி வைக்கும் நோக்கில்
வெவ்வேறு தலைப்புகளில்
12_ புத்தகங்கள் வெளியிட
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

#கவ்ஸர் எனும் தலைப்பில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மறுமையில்
கிடைக்கப் பெறும் பெரும் வெகுமதியான #கவ்ளுல்_கவ்ஸர் குறித்து விவரிக்கும் புத்தகம் நேற்றைய தினம்
குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் மாவட்ட தலைவர் M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி
அவர்கள் வீட்டில் நடைபெற்ற
ஸலவாத் மஜ்லிஸில்
வைத்து நூலின் முதல் பிரதியை
TMJ குமரி மாவட்ட தலைவர்
மெளலானா மெளலவி
அல் ஹாஃபிழ் Z.அஹ்மத் கபீர் அல்தாஃபி உஸ்தாத் அவர்கள் வெளியிட
SSF குமரி மாவட்ட முன்னாள்
செயலாளர்
மெளலானா மௌலவி
M.A.#அப்துல்லாஹ்_அன்வரி ஹஸ்ரத்
அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்..

இரண்டாவது பிரதியை
TMJ குமரி மாவட்ட தலைவர்
மெளலானா மெளலவி
அல் ஹாஃபிழ்
Z. அஹ்மத் கபீர் அல்தாஃபி
அவர்கள் வெளியிட
குமரி மாவட்ட சுன்னத் வல் ஜமாத் மாணவர் அமைப்பின் பொருளாளர் ஜனாப் முஹம்மது ஃபாஸில்
அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்

இந்த மகத்தான ஸலவாத் மஜ்லிஸில் ஏராளமான பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

அனைவருக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டது..

வல்லோன் அல்லாஹ் இதையொரு ஸாலிஹான அமலாக ஏற்றுக் கொண்டு மாநபியின் மஹப்பத்தை பெற்ற கூட்டத்தார்களில் நம்மை அனைவரும் ஆக்கியருள்வானாக...

ஆமீன் யா றப்பல் ஆலமீன்

அன்புடன்..
M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
இயக்குனர்: மைமூன் பப்ளிஷிங்‌ ஹவுஸ்.
திருவிதாங்கோடு.
குமரி மாவட்டம்..