பேரோடு அப்துர்ரஹ்மான் ஸகாஃபி ஹஸ்ரத் அவர்களின் வெளிநாட்டு பயணங்கள்

பேரோடு அப்துர்ரஹ்மான் ஸகாஃபி ஹஸ்ரத் அவர்களின் வெளிநாட்டு பயணங்கள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

இல்முல் ஃபிக்ஹ் என்பது ஒரு நம்பிக்கையாளருடைய
வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளில் மதக் கண்ணோட்டத்தை விளக்கும் ஒரு அறிவுப் பிரிவாகும்.

ஃபிக்ஹ் சம்பந்தமான அறிவைப் பெறவும், அதிகரிக்கவும் பாடுபடுவது ஒவ்வொரு தனிநபரின் கடமையாகும்.

ஃபிக்ஹ் அறிவைப்பெற
இன்று பல வாய்ப்புகள் உள்ளன.
எனது கழிந்த பயணத்தின் போது, ​​
எகிப்து மற்றும் ஜோர்டானில் உள்ள முக்கிய அறிஞர்கள் மற்றும் அறிவு மையங்களை பார்வையிட்டேன்.
அறிவைப் பரப்புவதற்காக அவர்கள் முன்வைத்த பல பாரம்பரிய மற்றும் புதுமையான கருத்துக்களைப் புரிந்துகொள்வதிலும்
தெரியாதவற்றை கேட்டு அறிந்து கொள்வதிலும் நான் சிறப்பு கவனம் செலுத்தினேன்.

ஜோர்டானில் உள்ள தாருல் இப்தாஃ அல்-உருதுனியாவின் கீழ் ஃபிக்ஹ் சட்டங்களை படிப்பதற்கான திட்டம் முன்மாதிரியானது.

ஜோர்டானில் ஒரு முக்கிய அறிஞரும்,
தாருல் இஃப்தா அல்-உருதுனியாவின் கிராண்ட் முப்தி ஆவார்.
டாக்டர் அஹ்மத் ஹஸனாத்
இல்முல் ஃபிக்ஹில் குறிப்பாக ஷாஃபி மத்ஹபை மக்களிடையே பரப்புவதற்கு அவர் எண்ணற்ற பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

அவரது தலைமையின் கீழ்
தாருல் இஃப்தா அல் உருதுனியா
அறிவுப் பிரச்சார துறையில்
ஏற்பாடு செய்த பல நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.
அவற்றில் பொது மக்களுக்கு அறிவூட்டும் நோக்கில் அமைக்கப்பட்டிருந்த சிறிய சிறு புத்தகங்களால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஒவ்வொரு சிறு புத்தகத்திலும் உள்ள தலைப்புகள் அடிப்படை பிரச்சினைகளை விவாதிக்கிறது
இந்த சிறு புத்தகங்களை அடிப்படையாகக் கொண்ட படிப்பு மற்றும் பயிற்சி வகுப்புகள் தாருல் இஃப்தாவின் கீழ் பல்வேறு இடங்களில் படிப்படியாக நடத்தப்படுகின்றன என்பதையும் அறிந்தேன்.

ஃபிக்ஹ் சட்டங்களை எளிமையான முறையில் புரிந்துகொள்வதில்
இத்தகைய முயற்சிகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நான் நேரடியாக அனுபவிக்க முடிந்தது

அறிவுப் பிரச்சார துறையில் நாம் அனைவரும் பயனுள்ள மாதிரிகளை உருவாக்க இறைவன் துணை புரிவானாக..

لقد تشرفتُ—بحمد الله—بزيارةٍ مباركة إلى سماحة المفتي العام للمملكة الأردنية الهاشمية الدكتور أحمد الحسنات، حيث التقيتُه لقاءً وديًّا علميًّا امتلأ توقيرًا للعلم وأهله، وعبقًا من أخلاق العلماء الربانيين.

وقد سرّني ما رأيتُه لدى سماحته من حكمةٍ راسخة، ونَفَسٍ إصلاحيٍّ أصيل، وحرصٍ بالغ على نشر الشريعة الإسلامية، وترسيخ منهج الوسطية الذي تميّزت به المملكة الأردنية الهاشمية عبر مؤسساتها الدينية الرصينة.

وأبنتُ لسماحته خلال اللقاء رسالةَ جامعة سراج الهدى، وإسهاماتها العلمية والدعوية، ومسيرتها في نشر العلوم والإنسانية واللغوية في الهند.

وأسأل الله أن يبارك في جهود سماحته المباركة، وأن يوفقه للسداد والعطاء، وأن يجعل هذا اللقاء بدايةً لمسيرة مثمرة تعود بالنفع على الأمة كلها.

✍️ பேரோடு அப்துர்ரஹ்மான் ஸகாஃபி....