Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அல்ஹம்துலில்லாஹ்.

கழிந்த 2018_ஆண்டு முதல் தமிழகம் தழுவிய‌ அளவிலான இஸ்லாமிய மார்க்க போட்டிகளுக்கு
மைமூன் பப்ளிஷிங்_ஹவுஸின் கீழில் துவக்கம் குறித்தோம்.

ஹஜ், ரமலான், ரபீஉல் அவ்வல் போன்ற புனித மாதங்களில் இஸ்லாமிய மார்க்க அறிவுகளை மக்களுக்கு நினைவூட்டும் விதமாகவும், அவர்களின் இஸ்லாமிய அறிவை பெருக்கும் விதமாகவும், இளம் தலைமுறைக்கு இஸ்லாமிய சன்மார்க்க ஞானங்களை அறிய உதவும் அடிப்படையிலும் இந்த மகத்தான போட்டிகளை நாம் நடத்தி வருகிறோம்.

புனித ரமளான் மாதத்தை முன்னிட்டு
என்னைக் கவர்ந்த குர்ஆன், கொரோனா தந்த படிப்பினைகள் எனும் இரு தலைப்பில்
தமிழகம் தழுவிய மாபெரும் மார்க்க கட்டுரைப் போட்டி நடத்தினோம்.

தமிழகம் தழுவிய அளவில் நடத்தப்பட்ட இப்போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நமது இந்த போட்டியின் மூலம் ஏராளமான அரபிக் கல்லூரி மாணவர்கள்,
மக்தப் மதரசா பிள்ளைகள்,
நிஸ்வான் மதரசா மாணவிகள்,
ஆலிம்கள், ஆலிமாக்கள், பொதுமக்கள் என பலரும் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று, இரண்டு,
மூன்று பரிசுகளை வென்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டிக்கான பரிசளிப்பு விழா நாம் நடத்தவில்லை.
பணத்தை அவரவர் அக்கவுண்டிற்கு அனுப்பி வைத்தோம்.

இந்த மகத்தான போட்டிக்காக உதவிய ஏராளம் நபர்கள் உண்டு.

பரிசுகளை அன்பளிப்பு தந்தவர்கள்,
இதற்காக ஸ்பான்சர்களை பிடித்து தந்தவர்கள்,
நம் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கியவர்கள்.

இந்த மகத்தான போட்டிக்கு உதவி
செய்த, ஒத்துழைத்த எல்லா அன்பு நெஞ்சங்களுக்கும், பரிசளிப்பு விழாவுக்கு வருகை புரிந்து, தலைமையேற்று மிக சிறப்பான முறையில் நடத்திய ஆலிம்களுக்கும் வல்லோன் அல்லாஹ் இரு உலகிலும் அனைத்து விதமான நலவுகளையும், வளங்களையும்,
செழிப்புகளையும் வழங்கி அருள்புரிவானாக.

இன்ஷா அல்லாஹ் மார்க்க ஞானங்களை மக்களுக்கு எத்தி வைக்கும் பொருட்டு ஏராளமான போட்டிகளை இனிவரும் காலங்களிலும் நடத்துவதற்கு நீங்கள் துஆச்செய்யும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

என்றும் மகிழ்வுடன்.

M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.
இயக்குனர்:மைமூன்
பப்ளிஷிங் ஹவுஸ்.
திருவிதாஙாகோடு
குமரி மாவட்டம்.
7598769505