பட்டினியால் மடியும் காசா
முஸ்லீம்களுக்கு எதிரான அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போனதால்
குரைஷி தலைவர்களால் நபியவர்களும் நபித் தோழர்களும் குடும்பத்தினருடன் ஊர் நீக்கம் உறவு நீக்கம் செய்யப்பட்டனர்.
மக்கா வாசிகள் அவர்களுடன் கொடுக்கல் வாங்கள் செய்வதோ வணீக தொடர்போ திருமண உறவோ சொந்தக் காரர்கள்,நண்பர்கள் சுக துக்கங்களில் கலந்து கொள்வதோ அனைத்தும் தடை செய்யப்பட்டது.
வெளியில் இருந்து அடிப்படை மனிதாபிமான உதவிகள் கூட உட்செல்வது தடுக்கப்பட்டு அனைவரும் அபுதாலீப் கணவாயில் அடைக்கப்பட்டனர்.
இக்காலக்கட்டத்தில் முஸ்லீம்கள் உண்ணுவதற்கு ஏதுமின்றி இலைகளையும், தோல்களையும் சாப்பிடும் இக்கட்டு நிலைக்கு ஆளாயினர்.
பசியினால் பெண்களும், சிறுவர்களும் அழும் குரல்கள் கணவாய்க்கு வெளியில் கேட்டன.
மக்காவில் இருந்த மனிதாபிமானம் உள்ள முஸ்லீம் அல்லாத சில நல்லுல்லங்கள் பரிவு பஞ்சாதப்பட்டு மிக இரகசியமாக சிறு உதவிகளை செய்தன.
இருந்தாலும் அவை கூட அபூஜஹ்ல் போன்ற கொடிய தலைவர்களால் தடுக்கப்பட்டன. இந்த முற்றுகை மூன்று ஆண்டுகள் நீடித்தது....
காசா நிலமை அப்படியே வரலாற்றை மீட்டிச் செல்கிறது.