ஸஹாபாக்கள் மவ்லித் மஜ்லிஸ்
மீலாத் மவ்லித்

ஸஹாபாக்கள் மவ்லித் மஜ்லிஸ்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ஸஹாபாக்களின்_மவ்லித்_மஜ்லிஸ்....

நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மத்ஹுகள் பாடி புகழ்ந்து துதிப்பதற்க்காக அல்லவா மவ்லித் மஜ்லிஸுகளைக் கொண்டு
நாம் நாடுகிறோம்..

இத்தகைய மவ்லித் மஜ்லிஸுகள் ஸஹாபாக்களிடையே பரவலாக நடைபெற்றதாக வரலாற்று நூல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை மேற்கோள் காட்டி இமாம் திர்மிதி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் அறிவிக்கிறார்கள்...

இறைத்தூதர்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர்கள் அனைவரும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்காகக் காத்திருக்கிறார்கள்.
அவர்கள் (நபித்தோழர்கள்)
வஃபாத்தாகி போன நபிமார்களின் மத்ஹுகள், மவ்லிதுகள் பாடிக்கொண்டும், ஓதிக் கொண்டும் இருக்கிறார்கள்..
அப்போது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி)
அவர்கள் கடந்து வந்தார்கள்.
ஸஹாபாக்கள் முன் கழிந்த போன நபிமார்களைக் குறித்து கூறிய புகழுரையை ஏற்றுக் கொண்டார்கள், பிறகு நபிகள் நாயகம்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம்முடைய புகழுரைகளை ஓதினார்கள்.........
"நான் அல்லாஹ்வின் ஹபீப்,
நான் இறுதி நாளின் கொடியை சுமப்பவன், இறுதி நாளில் ஷஃபாஅத்தின் விஷயத்தில் நானே முதன்மையானவன்.
நான்தான் முதன் முதலில் சொர்க்கத்தைத் திறப்பேன்,
என்னுடன் அல்லாஹ் ஏராளமான விசுவாசிகளை சொர்க்கத்தில் நுழையச் செய்வான்,
நான் அனைவரும் விட மிகச் சிறந்தவன்"

في سنن الترمذي: عن ابن عباس قال : جلس أصحاب رسول الله صلى الله عليه وسلم ينتظرونه قال فخرج حتى إذا سمعهم يتذاكرون فسمع حديثهم فقال بعضهم عجبا أن الله عز وجل اتخذ من خلقه خليلا اتخذ إبراهيم خليلا وقال آخر ماذا بأعجب من كلام موسى كلمه تكليما وقال آخر فعيسى كلمة الله وروحه وقال آخر آدم اصطفاه الله فخرج عليهم فسلم وقال قد سمعت كلامكم وعجبكم أن إبراهيم خليل الله وهو كذلك وموسى نجي الله وهو كذلك وعيسى روح الله وكلمته وهو كذلك وآدم اصطفاه الله وهو كذلك ألا وأنا حبيب الله ولا فخر وأنا حامل لواء الحمد يوم القيامة ولا فخر وأنا أول شافع وأول مشفع يوم القيامة ولا فخر وأنا أول من يحرك حلق الجنة فيفتح الله لي فَيُدْخِلُنِيهَا ومعي فقراء المؤمنين ولا فخر وأنا أكرم الأولين والآخرين ولا فخر

سنن الترمذي (رقم الحديث: 3616)

#ஸவாத்_பின்_காரீப்பின்
அவர்களுடைய மவ்லித் மஜ்லிஸ்....

#ஹாஃபிழ்_இப்னு_கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி
அவர்கள் கூறுகிறார்கள்:

நபித்தோழரான ஸவாத் பின் காரீப் கூறுகிறார்கள்:

நான் எனது வாகனத்தை மதீனாவிற்கு அருகில் கொண்டு வந்தேன்.
அவ்விதம் நான் நபி
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அருகில் வந்தேன்.
நான் நபி
(ஸல்லல்லாஹு அலைஹி)
அவர்களிடம் அவர்களைக் குறித்து
மத்ஹ் பாட அனுமதி கேட்டேன்.
அந்நேரத்தில் நான் நபியை அதிகம் மத்ஹ் பாடினேன்.
இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மற்றும் நபித்தோழர்கள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் கடவாய் பற்கள் தெரியும் அளவுக்கு மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

ஸவாதே...... நீ வெற்றியடைந்துவிட்டாய்
இந்த மத்ஹுகளை உனது நாட்டிலும் சென்று பாடுங்கள் என்று இறைத்தூதர்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் என்னிடத்தில் கூறினார்கள்.

وفي البداية والنهاية ...عن سواد بن قارب: قد امتحن الله قلبي، فرحلت ناقتي ثم أتيت المدينة - يعني مكة فإذا رسول الله -صلى الله عليه وسلم- في أصحابه فدنوت فقلت: اسمع مقالتي يا رسول الله. قال هات فأنشأت أقول

وَكُنْ لِي شَفِيعًا يَوْمَ لَا ذُو شَفَاعَة
سِوَاكَ بِمُغْنٍ عَنْ سَوَادِ بْنِ قَارِبِ

قال ففرح رسول الله -صلى الله عليه وسلم- وأصحابه بمقالتي فرحا شديدا، حتى رُئِيَ الْفَرَحُ في وجوههم.
ورواية أخرى...فقال رسول الله -صلى الله عليه وسلم-: "سر في قومك وقل هذا الشعر فيهم"...وقال بعد إنشاد الشعر الأخير فضحك رسول الله -صلى الله عليه وسلم- حتى بدت نواجذه وقال: " أفلحت يا سواد

(البداية والنهاية للحافظ ابن كثير 2/ 408)

#கஃப்_பின்_ஸுஹைர்
(ரழியல்லாஹு அன்ஹு)
அவர்களின் மவ்லித் மஜ்லிஸ்..

#இமாம்_பைஹகி
(ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
அவர்கள் அறிவிக்கிறார்கள்..

"கஃப் பின் ஸுஹைர் (
ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது புகழ்பெற்ற கவிதையான பானத் ஸுஆத் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முன்னால் பாடினார்கள்,
மேலும் ஒரு குறிப்பிட்ட வரியை அடைந்ததும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதைக் கேட்க தம்முடன் இருந்த தோழர்களை அழைத்தார்கள்."

عن موسى بن عقبة قال: أنشد النبي ﷺ كعب بن زهير: بانت سعاد في مسجده بالمدينة، فلما بلغ قوله:

إن الرسول لسيف يستضاء به
مهند من سيوف الله مسلول
في فتية من قريش قال قائلهم
ببطن مكة لما أسلموا زولوا

أشار رسول الله ﷺ بمكة إلى الحلق، ليأتوا فيسمعوا منه.

◉ السنن الكبرى للبيهقي
◉ الاستيعاب للإمام ابن عبد البر
◉ البداية والنهاية للحافظ ابن كثير

#ஹஸ்ஸானு_பினு_ஸாபித் (ரழியல்லாஹு அன்ஹு)
அவர்களின் மவ்லித் மஜ்லிஸ்...

#ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்:

"ஹஸ்ஸான் பின் தாபித்
(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை
மத்ஹ் கூறுவதற்காக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு மிம்பரைக் அவருக்காக கட்டினார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "அல்லாஹ் ஹஸ்ஸானை ரூஹுல் குத்ஸைக் கொண்டு பலப்படுத்துவானாக"
என்று கூறுவார்கள்.

عن عائشة قالت: كان رسول الله ﷺ يضع لحسان منبرا في المسجد يقوم عليه قائما يفاخر عن رسول الله ﷺ أوينافح. ويقول رسول الله ﷺ: «إن الله يؤيد حسان بروح القدس ما نافح أو فاخر عن رسول الله ﷺ.

مشكاة المصابيح / رقم الحديث ٤٨٠٥

✒️ஸெய்யித் லுத்துஃபி பாஹஸன்
(மஃதின் ஸாதாத் அகாதமி)

தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.