ரமளான் வினா விடை பாகம்.. 11
ரமளான் வினா விடை

ரமளான் வினா விடை பாகம்.. 11

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_11....

51 : செவியில் மருந்து உபயோகித்தால் நோன்பு முறியுமா...?

காது, மூக்கு, வாய் போன்றவையின் வழியாக மருந்து உள்ளே சென்றால் நோன்பு முறியும்...

52 : கஃபம் விழுங்கினால் நோன்பு முறியுமா..?

முறியும்...

53 : உமிழ்நீர் விழுங்கினால் நோன்பு முறியுமா..?

வெறும் உமிழ்நீர் மட்டுமே எனில் நோன்பு முறியாது

54 : குளிக்கும் போது தண்ணீர் உள்ளே சென்றால் நோன்பு முறியுமா...?

கடமையான குளியாக இருந்தால் மனப்பூர்வமல்லாது தண்ணீர் உள்ளே சென்றால் பிரச்சினை இல்லை...

55 : வாய் திறந்து இருக்கும் நிலையில்
ஈ, புகை, வேறு சாதனங்கள் உள்ளே சென்றால் நோன்பு முறியுமா...?

அறியாது உள்ளே சென்றால் நோன்பு முறியாது..
மனப்பூர்வமாக இருந்தால் நோன்பு முறியும்....

*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...

வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....