Sirajudheen Ahsani
எழுத்தாளர்


இந்த ஆண்டு (2025)
புனித ரபீஃ மாதம் கடந்து
வருவதன் மூலம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 1500_வது பிறந்தநாளில் உலகம் நுழைகிறது.

அந்த செம்மல் நபி உலகம் முழுவதற்கும் ஒரு அருட்கொடை யாக பூமியில் இறங்கி 15 நூற்றாண்டுகள் முழுமையடைகிறது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் புகழ்ந்து, அவரது பிறப்பின் மகிழ்ச்சியை விசுவாசிகள் துதிக்க வேண்டும்.
நபி நேசம் நம் சுவாசமாக மாற வேண்டும்..

உலகை அன்பால் வென்ற அந்த மாபெரும் தலைவரின்
நினைவுகள் கூட நாம் ஒரு நல்ல மனிதனாக மாறுவதற்கான ஒரு செழிப்பான பயணமாகும்.

அந்த மரபை மீட்டெடுத்து அந்த மாநபியின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்வதன் மூலம் இவ்வுலகை அழகாக மாற்றுவோம். புனித நபியின் அன்பின் மூலம் வரவிருக்கும் உலகத்திற்கான விதைகளை விதைப்போம்.

தமிழக முஸ்லிம் ஜமாஅத்தின் குமரி மாவட்ட புதிய நிர்வாகம் அமைந்த பின்னர் #முதல்_கூட்டம்
நேற்று மஃரிப் தொழுகைக்கு பின் #திருவை_ஹமீதிய்யா_மஜ்லிஸில் வைத்து நடைபெற்றது..

TMJ,SSF, மாநில,
மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாநபியின் 1500_வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தின்
500_ இல்லங்களில் *மாநபி மத்ஹ் மஜ்லிஸுகளை* நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது..

அதற்கான புதிய கமிட்டியும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேலும் ரபீஉல் அவ்வல்
முதல் பிறையை வரவேற்கும்
பொருட்டு
வரும் திங்கட்கிழமை காலை
10_30_ திருவை
ஹமீதிய்யா மஜ்லிஸில் வைத்து மாபெரும் மவ்லித் மஜ்லிஸ் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது..

வல்லோன் அல்லாஹ் இந்த காரியங்கள் அனைத்தையும் சிறப்பான முறையில் நடந்தேறிட துணையும் கிருபையும் செய்தருள்வானாக..

மக்களிடம் அன்பையும் சகோதரத்துவத்தையும் பேணவும், பொய்கள் மற்றும் வெறுப்பை ஆதரிப்பவர்களுக்கு எதிராகப் போராடவும் நமக்குக் கற்றுக் கொடுத்த மாபெரும் குரு முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் செய்தியை நாம் உறுதியாகப் பற்றிக் கொள்வோம்.
பிறருக்கு அவர்களின்
மகத்தான போதனைகளை எத்திவைப்போம்..

صلّى اللّه عليه محمد صلّى اللّه عليه وسلّم