திங்கட்கிழமை நோன்பு பிறந்த நாள் மகிழ்ச்சி
#திங்கட்கிழமை_நோன்பு....
#பிறந்தநாள்_மகிழ்ச்சி....
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த நாள் புனிதமானதும்,
சங்கை மிக்கதுமான நாளாகும்.
எனவே அந்த நாளை மதிக்கவும்,
கௌரவிக்க வேண்டும்.
திரு பிறவியில்
மகிழ்ச்சியடையவும் வேண்டும்.
அந்நாளுக்கு புனிதமும், சிறப்பும் உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நமக்கு போதித்துள்ளார்கள்.
இமாம் #முஸ்லிம்
(ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவித்த ஹதீஸில் பார்க்க முடியும்..
"திங்கட்கிழமை நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது
அன்றுதான் நான் பிறந்தேன்
என்று பதிலுரைத்தார்கள்...
#وفي_صحيح_مسلم: عن أبي قتادة الأنصاري: أن رسول الله ﷺ سئل عن صوم الاثنين، فقال: فيه ولدت، وفيه أنزل علي.
(صحيح مسلم ٢٨٠٧)
நபிகள் நாயகம்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு திங்கட்கிழமை பிறந்ததால்
அந்த நாளுக்கு மகத்துவம் உண்டு எனவும் அதன் மூலம் புனிதமான நிகழ்வுகள் நடந்த இடங்களும், நேரங்களும் புனிதம் பெறுகின்றன என்பதை விளக்கி இந்த ஹதீஸை அறிஞர்கள் பலர் பதிவு செய்துள்ளனர்.
◉ #இமாம்_முல்லா_அலி_அல்_காரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
அவர்கள் கூறுகிறார்கள்:
"சங்கையான நிகழ்வுகள் நடந்த நேரங்களுக்கும், இடங்களுக்கும் மேன்மை உண்டு என்பதை இந்த
ஹதீஸ் உணர்த்துகிறது".
#قال_الإمام_ملا_علي_القاري: في الحديث دلالة على أن الزمان قد يتشرف بما يقع فيه، وكذا المكان.
(مرقاة المفاتيح ٤٧٥/٤)
◉ #இமாம்_இப்னு_ஹஜர்_அல்_ஹைதமி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
அவர்கள் கூறுகிறார்:
"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்ததும், அவர்களுக்கு அல்குர்ஆன் அருளப்பட்டதும்
ஒரு திங்கட்கிழமை என்பதால்
இந்த நாள் மிகவும் மேன்மை பெற்றுள்ளது.
இந்த இரண்டு அருட்கொடைகளுக்காகவும் நோன்பு நோற்கவும், நன்றி செலுத்தவும் இது மிகவும் பொருத்தமான தினமாகும்."
#قال_الإمام_ابن_حجر_الهيتمي: (و عنه قال: سئل رسول الله ﷺ عن صيام الاثنين هل فيه فضل؟) ويأتي وجه تسميته بذلك (فقال) نعم فيه فضل عظيم لأن هذا اليوم قد وقع فيه أمران عظيمان يدلان شرفه وفضله : أحدهما إني ولدت فيه وثانيهما: إني (أنزل علي) أي: فيه وجود نبيكم ومشرفكم، وفيه نزول كتابكم وثبوت نبوة نبيكم وأي يوم أفضل وأولى أن يصام فيه شكرا لله تعالى على هاتين النعمتين العظيمتين من هذا اليوم ؟اه
(فتح الإله بشرح المشكاة ١٨/٧)
திருபிறவி சம்பவித்த இந்த தினத்திற்கு மகத்துவம் உண்டு என்று போதிப்பது மூலம் ரபீஉல் அவ்வல் மாதத்திற்கும் புனிதம் உண்டு என்று புரிந்து கொள்ள முடியுமென மாலிக் மத்ஹபின் மாபெரும் பேரறிஞரான இமாம் இப்னுல் ஹாஜ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் விளக்குகிறார்கள்.
◉ #இமாம்_இப்னுல்_ஹாஜ் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
அவர்கள் கூறுகிறார்கள்:
திங்கட்கிழமை நோன்பு பற்றி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்டபோது நான் அன்றுதான் பிறந்தேன் என்று
கூறியதன் மூலம் ரபீஉல் அவ்வல் மாதத்தின் புனிதத்தன்மையை
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்
சுட்டிக் காட்டுகிறார்கள்.
காரணம் இந்த தினத்திற்கு மகத்துவம் கிடைப்பது மூலம் இந்த மாதத்திற்கும் புனிதம் கிடைக்கிறது..
எனவே நாம் இந்த ரபீஉல் அவ்வல் மாதத்தை கௌரவிப்பதும்,
மதிக்க வேண்டியதும்
நம் மீதுகட்டாயமாகும்."
#قال_الإمام_ابن_الحاج: أشار ﷺ إلى فضيلة هذا الشهر العظيم بقوله ﷺ للسائل الذي سأله عن صوم يوم الاثنين فقال ﷺ «ذلك يوم ولدت فيه» فتشريف هذا اليوم متضمن لتشريف هذا الشهر الذي ولد فيه. فينبغي أن نحترمه حق الاحترام ونفضله بما فضل الله به الأشهر الفاضلة وهذا منها لقوله ﷺ «أنا سيد ولد آدم ولا فخر».
(المدخل للإمام ابن الحاج ٢/٣)
◉ #இமாம்_வர்ஷரீசி
(ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
அவர்கள் கூறுகிறார்கள்:
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிறந்த தினத்தின் பகலும், இரவும் புனிதமானவை என்பதும், அது எல்லாக் காலங்களிலும் நிலைத்திருப்பதும், அந்நாளை சிறப்புமிக்கதாகக் கருதுவதும் இந்த ஹதீஸ் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
قال الإمام الونشريسي: قلت: ثبت بهذا الحديث استمرار أفضلية ليلة المولد وصبيحتها، فشرفها باق ورعي زمانها ثابت. إذ لا نزاع في صحة الحديث ولا يرد عليه شيء من الأسئلة الواردة على المتون كما تقرر عند الأصوليين وأهل النظر.
(المعيار المعرب للإمام الونشريسي 1/ 279)
◉புகழ்பெற்ற அறிஞர் & காரி
இமாம் #இப்னுல்_ஜஸரி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி)
அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதத்தின் புனிதத்தைப் பற்றி பாடுவதைப் பாருங்கள்...
#قال_الإمام_ابن_الجزري:
لهذا الشهر في الإسلام فضل
وافضال يفوق على الجميع
سماه وهو والمولود فيه
ربيع في ربيع في ربيع
◉ عرف التعريف للإمام ابن الجزري ٢٥
◉ المولد الروي في المولد النبوي للامام ملا علي القاري (مجموع الرسائل ٣٧١/٥)
✒️அபுதாஹீர் ஃபைசி மானந்தவாடி..
தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.